Pages

Thursday, May 4, 2017

கோடை விடுமுறையில் பயிற்சி; ஆசிரியைகள் கொந்தளிப்பு

கோடை விடுமுறையில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம், முதன்மை கருத்தாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஆசிரியைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் சார்பில் கணிதம், அறிவியல் பாடங்களுக்கான முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி மே, 8 முதல், 12 வரை நடக்கிறது. இதில், கணிதம், அறிவியல் பாடங்களுக்கு, வருவாய் மாவட்டத்தில் இருந்து ஒவ்வொரு பாடத்திற்கும் தலா, 50 பேர் தேர்வு செய்யப்பட்டு முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது.
தென் மண்டலத்தில் கணித பாடத்திற்கு திண்டுக்கல், அறிவியல் பாடத்திற்கு திருச்சியில் உண்டு, உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குப் பின், முதன்மை கருத்தாளர்கள் அந்தந்த மாவட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சியளிப்பர். கோடை விடுமுறையில், ஐந்து நாட்கள் பயிற்சியளிக்கப்படுவதால் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து ஆசிரியை ஒருவர் கூறியதாவது கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது எனக் கூறும் கல்வித்துறை, ஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கலாமா. கோடை விடுமுறையில் பெண் ஆசிரியைகள் வெளிமாவட்டங்களுக்கு சென்று தங்குவதில் சிரமம் உள்ளது. கோடையில் பயிற்சி வகுப்பை கல்வித்துறை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்..com

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.