Pages

Thursday, May 4, 2017

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு

திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு வட்டார வள மைய மேற்பார்வையாளர் கணேசன் தலைமையில் நடந்தது. 


பல்வேறு கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வில் 10 குழந்தைகள் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டு அவர்களை அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

வட்டார வள மைய மேற்பார்வையாளர் கணேசன் கூறுகையில் தங்கள் பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் இருப்பின் அவர்களை பற்றிய தகவல்களை வட்டார வள மையத்தில் தெரிவித்தால் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.