Pages

Thursday, March 9, 2017

1,111 ஆசிரியர் நியமனம் : நாளை டி.ஆர்.பி., பட்டியல்

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான, 'டெட்' தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை பட்டியல், நாளை வெளியாகிறது. ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வு, ஏப்., 29, 30ல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே டெட் முடித்தவர்கள், தங்களுக்கு பணி நியமனம் கிடைக்குமா என, கவலையில் இருந்தனர். 


இந்நிலையில், 1,111 காலியிடங்களுக்கு, ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் தற்போதைய காலியிடங்கள், 286; பின்னடைவு காலி இடங்கள், 623; அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், 202 காலி இடங்கள் என, 1,111 இடங்களுக்கு, ஏற்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலம், பதிவு மூப்பு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.இந்த தரவரிசை பட்டியலுக்கு, முந்தைய மதிப்பெண் பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில், நாளை வெளியாகிறது. 

அதை, http:/www.trb.tn.nic.in/ என்ற, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம். இதில் சுயவிபரங்கள் தவறாக இருந்தால், 'ஆன்லைனில்' நாளை காலை, 10:00 மணி முதல், மார்ச் 20 இரவு, 10:00 மணிக்குள் பதிவேற்றம் செய்யலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. இதில், எழுத்துபூர்வமான விண்ணப்பங்கள் எதுவும் ஏற்கப்படாது; மறுவாய்ப்பு இனி தரப்படாது. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.