கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. இன்று அறிவிக்கப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதனை அறிவித்தார். மேலும், வருமான வரி சமர்ப்பிக்கும் படிவம் எளிமையாக்கப்படும்.
ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையுள்ள வருமானத்துக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 சதவீதமாக இருந்த வரி விகிதம் இனி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், 50 லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.
80 சி பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறுவதற்கான உச்ச வரம்பு 4.5 லட்சமாக அதிகரிப்பு.
வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.