Pages

Wednesday, February 15, 2017

ஓய்வு ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு, ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில், திருச்செங்கோடு அண்ணாதுரை சிலை அருகில், நேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. 


மாவட்ட தலைவர் கருப்பன் தலைமை வகித்தார். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாநில அரசு, எட்டாவது ஊதியக்குழுவை அமைத்து, ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். 

20 ஆண்டு பணிக்காலத்திற்கு மத்திய அரசு போல மாநில அரசும் முழு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.