Pages

Wednesday, December 21, 2016

ரேஷன் கார்டில் 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்ட முடிவு

ஆதார் இணைப்பு பணி முழுமை பெறாததால், ரேஷன் கார்டில் அடுத்த 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் கார்டுக்கு பதிலாக, ‛ஸ்மார்ட் ரேஷன் கார்டு' வழங்குவதற்கான பணிகள் 320 கோடி செலவில் நடந்து வருகின்றன. எனினும், ஆதார் எண் இணைக்கும் பணி முழுமை பெறதாதால் ரேஷன் கார்டில் அடுத்த 6 மாதங்களுக்கு உள்தாள் ஒட்டி பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
இதுவரை, 47 சதவீத கார்டுதாரர்களின் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்கள் வாங்கப்பட்டு உள்ளன. 46 சதவீத ரேஷன் கார்டுதாரர்களின் குடும்பங்களில், தலா ஒருவரின் ஆதார் எண் மட்டுமே பெறப்பட்டு உள்ளது.ஸ்மார்ட் கார்டு வடிவமைப்பு இன்னும் முடிவாகவில்லை. அது முடிவானதும், கார்டு அச்சிடும் பணி துவக்கப்படும்.
தற்போதைய சூழலில், புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டில் அடுத்த 6 மாதத்திற்கான உள்தாள் ஒட்டி பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.