ஊழலை நாட்டில் இருந்து வேரோடு ஒழிக்கும் வரையிலும்கறுப்பு பணத்திற்கு எதிரான போர்தொடரும் எனவும், நேர்மையற்ற நபர்களுக்கு டிசம்பர் 30-ம் தேதிக்குப்பிறகு பிரச்சனைகள் அதிகரிக்கும்என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பைஅரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்குபிரமாண்ட சிலையுடன் கூடியநினைவிடத்திற்கு பிரதமர் மோடிஇன்று அடிக்கல் நாட்டினார். பின்னர்எம்.எம்.ஆர்.டி.ஏ மைதானத்தில் உள்ளசிவாஜி சிலைக்கு பிரதமர் மோடிமலர் அஞ்சலி செலுத்தினார்.
அதன்பின்னர் நடந்த நிகழ்ச்சியில்கலந்துகொண்ட பிரதமர் மோடிபேசியதாவது: ரூபாய் நோட்டு ஒழிப்புநடவடிக்கை மூலமாக இந்தியாவில்பெரிய அளவில் பொருளாதாரமாற்றம் வரும்.
நாட்டு மக்களின் நம்பிக்கை வீண்போகாது.
நேர்மையற்றவர்களே, நீங்கள் 125 கோடி மக்களின் மனநிலையை குறைத்து மதிப்பிடாதீர்கள். அரசின்நடவடிக்கையால் நீங்கள் பயப்படவேண்டி வரும். வலிமைமிக்கஇந்தியாவில் மாற்றத்தை கொண்டுவருவோம். நவம்பர் 8-ம் தேதிவரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம்எடுக்கப்பட்டது. அடுத்த 3 ஆண்டுகளுக்குள் உலகின்முன்ணனி நாடாக இந்தியாஇருக்கும்.
ஊழலை நாட்டில் இருந்து வேரோடுஒழிக்கும் வரையிலும் இந்த கறுப்புபண போர் தொடரும். ரொக்கமற்றபண பரிவர்த்தனைக்கு மாறுவதுஅவசியம். டிசம்பர் 30ம் தேதிக்கு பிறகு நேர்மையற்றவர்கள்மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கநேரிடும். நேர்மையானவர்கள்சந்தித்து வரும் இக்கட்டானபாதிப்புகள் குறையும். இவ்வாறுஅவர் பேசினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.