Pages

Wednesday, October 12, 2016

பஞ்சப்படி இழுத்தடிப்பு; ஆசிரியர்கள் புலம்பல்!

அடிப்படை ஊதியத்தில் இருந்து வழங்கப்படும் அகவிலைப்படி தொகை, மூன்று மாதங்களுக்கு மேலாகியும், வழங்காமல் இழுத்தடிப்பதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர். தமிழகத்தில், 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி பள்ளிகள் உள்ளன. இதில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மாதச் சம்பளம் அல்லாமல், போனஸ், பயணப்படி உள்ளிட்ட, சில சலுகைகள் வழங்கப்படும். 


இதில், அகவிலைப்படியாக, அடிப்படை ஊதியத்தில் இருந்து, குறிப்பிட்ட சதவீத தொகை, ஜூன் மற்றும் ஜனவரி மாதங்களில் வழங்கப்படும். நடப்பு கல்வியாண்டு துவங்கி, நான்கு மாதங்களுக்கு மேலாகியும், அகவிலைப்படி தொகை தராமல் இழுத்தடிப்பதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.


இதுகுறித்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வைக்கும் கோரிக்கை: ஆசிரியர்களுக்கு, தீபாவளி போனஸ் வழங்கப்படுவதில்லை; ஆண்டுக்கு இருமுறை, 6 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். 

இந்த தொகையைத் தந்தால், பண்டிகைக்கால செலவுகளுக்கு உதவியாக இருக்கும். இத்தொகையை விரைவில் தர, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.