Pages

Monday, October 17, 2016

ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி

மூன்று ஒன்றியங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டது. ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி ஒன்றியங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு, எளிமையான செயல்வழி கற்றல் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. ஆர்.கே.பேட்டையில் நடந்த இந்த பயிற்சியில், மாவட்ட கல்வி அலுவலர் தயாளன் கலந்து கொண்டு, பயிற்சியின் நுட்பங்களை ஆசிரியர்களுக்கு விளக்கினார்.


உ.தொ.க., அலுவலர்கள் அரங்கன், மோகன், கவுடா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருத்தணி ஒன்றியங்களைச் சேர்ந்த, 60 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

எளிமையாக்கப்பட்ட செயல்வழி கற்றல் முறை குறித்த பயிற்சி, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்களின் கற்றல் அனுபவம் இனிமையாக இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.