அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் சார்பில் வரும் கல்வி ஆண்டிற்கான திட்டமிடல் குறித்த தகவல் திரட்டும் பணிமனை நேற்று கடலுாரில் நடந்தது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் சார்பில் 2017- 2018 ம் ஆண்டிற்கான திட்டமிடல் குறித்தும், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குறித்த தகவல் பெறுவதற்கான கூட்டம் கடலுார் செயின்ட் ஆன்ஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள 408 உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தலா ஒரு உதவி ஆசிரியர்களுடன் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பள்ளி விபரங்களை சேகரிக்கும் விதமாக கல்வி மேலாண்மை மற்றும் தகவல்கள் திரட்டுவதற்கான படிவங்கள் வழங்கப்பட்டு, அவற்றை எவ்வாறு பூர்த்தி செய்து அளிப்பது குறித்து விளக்கப்பட்டது.பணிமனையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி துவக்கிவைத்தார். கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி, ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர், பாலமுருகன், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி, சி.இ.ஓ.,வின் நேர்முக உதவியாளர்கள் முருகன், தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.