பொது மாறுதல் கலந்தாய்வை கடந்த ஆண்டைப் போல நடத்த வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மதுரை மாவட்டத் தலைவர் கே.அனந்தராமன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் ஆக. 6 ஆம் தேதி தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இதில் கடந்த ஆண்டு பதவி உயர்வு பெற்றுச் சென்றவர்கள் பங்கேற்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணிநிரவல் முறையில் இடமாறுதலுக்கு உள்ளான தலைமை ஆசிரியர்களும், கலந்தாய்வில் பங்கேற்க இயலாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே கடந்த ஆண்டைப் போல பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். கடந்த ஆண்டு பதவி உயர்வில் சென்ற தலைமை ஆசிரியர்களையும், பணிநிரவலில் இடமாறுதல் செய்யப்பட்டவர்களையும் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.