ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான தமிழ் மொழி தேர்வு, செப்., 19ல் துவங்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
தமிழக அரசு துறையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு, தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பதவிகளில் இருப்போர், வெளி மாநிலத்தவர் என்றாலும், அவர்களும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இதன்படி, அவர்களுக்கான தமிழ் மொழி திறன் தேர்வு, செப்டம்பர், 19 முதல் அக்., 5 வரை நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அதிகாரிகள், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.