Pages

Tuesday, May 17, 2016

மதிப்பெண் குறைந்தால் திட்ட வேண்டாம்

'104' சேவை மைய விழிப்புணர்வு மேலாளர் பிரபுதாஸ் கூறியதாவது: இன்று பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகிறது. எதிர்பார்த்ததை விட குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்கள் அல்லது தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. பெற்றோர் விழிப்போடு இருக்க வேண்டும். மாணவர்களை திட்ட வேண்டாம்; அது, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.


முடிந்த அளவு அவர்களை தேற்றுங்கள்; முடியாவிட்டால், '104'ஐ அழையுங்கள்; வாழ்வில் வெற்றி பெறுவதற்கான பல வாய்ப்புகள் குறித்து, ஆலோசனைகளை தருகிறோம். கடந்த ஆண்டில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான அன்று, ஆலோசனை கேட்டு, 10 ஆயிரம் அழைப்புகள் வந்தன. இதை கருத்தில் கொண்டு, இந்த முறை, அதிக அளவில் உளவியல் ஆலோசகர்களை நியமித்துள்ளோம். மாணவர்கள் மட்டுமல்ல, பெற்றோரும் ஆலோசனை பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.