Pages

Monday, April 25, 2016

தலைமையாசிரியர்களுக்கு சி.இ.ஓ., பதவி உயர்வு!

மதுரையில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநில பொதுக் குழுக் கூட்டம் நடந்தது. மாநில தலைவர் பொன்முடி தலைமை வகித்தார். பொது செயலாளர் ரமேஷ், பொருளாளர் சண்முகநாதன், அமைப்பு செயலாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் அனந்தராமன் வரவேற்றார். பதவி உயர்வு பிரச்னைக்கு தீர்வு காண கருணாகரன் சீராய்வுக் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். 


உயர்நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுப்படி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் (சி.இ.ஓ.,) பதவி உயர்வு அளிக்க வேண்டும். பள்ளிகள் மீண்டும் திறப்பதற்குமுன் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி காலிப் பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.