சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 12 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனால், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகளில் அன்றைய தினம் தேர்வு நடைபெறவில்லை.
இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மறுதேதியை சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த 9, 13, 14, 16, 17, 18, 23, 24, 25, 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்து ஒத்திவைக்கப்பட்டுள்ள செமஸ்டர் தேர்வுகள் முறையே அடுத்த மாதம் 4, 5, 7, 1, 2, 3, 8, 9, 10, 11, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.