பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு முதல்வரின் சிறப்பு கல்வி விருது வழங்கும் விழா நடந்தது. கமிஷனர் கதிரவன் தலைமை வகித்தார். தமிழகத்தில் மாநகராட்சி பள்ளிகளில், மதுரை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் கடந்த கல்வியாண்டு பொதுத் தேர்வில் முதலிடம் பெற்று சாதித்தனர்.
அவர்களுக்கும், முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கும், பாடங்களில் 100 சதவீதம் தேர்ச்சியடைந்த பள்ளிகளுக்கும் ரூ.18 லட்சம் வழங்கப்பட்டது. மாநகராட்சி சாதனை மலரை மேயர் ராஜன் செல்லப்பா வழங்கி பேசுகையில், பழக்கமிஷன் மண்டி, லாரி ஸ்டாண்ட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் நகரில் நெரிசல் குறையும். வைகை ஆற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் பணிகள் விரைவாக முடிக்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.