Pages

Wednesday, September 9, 2015

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜுலை 2015 முதல் அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவையில் இன்று பரிசீலனை?

தில்லியில் புதன்கிழமை நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதன் மூலம், 48 லட்சம் அரசு ஊழியர்களும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பயன்பெறுவார்கள் என்று தெரிகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தற்போதுள்ள 113 சதவீதத்தில் இருந்து 
119 சதவீதமாக உயர்த்துவது குறித்து மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த அகவிலைப்படி உயர்வு, கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலாக உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.