'மத்திய இடைநிலை கல்வி வாரியமான - சி.பி.எஸ்.இ.,யின், ஒரு பெண் குழந்தைக்கான கல்வி உதவித் தொகை பெற, செப்., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளியில், 10ம் வகுப்பு முடித்த மாணவியருக்கு, மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதில், குடும்பத்தில், ஒரே ஒரு பெண் குழந்தையாக இருக்கும் மாணவி யருக்கு, பிளஸ் 2 வரை, மாதம், 500 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை பெற, மாணவியர், 10ம் வகுப்புத் தேர்வில், 60 சதவீதம் அல்லது, 6.2 என்ற தரவரிசை பெற்றிருக்க வேண்டும். இந்த தகுதி உள்ளவர்கள், http://cbse.nic.in/ இணைய தளம் மூலம், 'ஆன் - லைனில்' செப்., 30க்குள் விண்ணப்பிக்கலாம். 'ஆன் - லைன்' பதிவுக்கு பின், ஆவணங்களை, அக்., 15க்குள், டில்லியிலுள்ள சி.பி.எஸ்.இ., அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.இத்தகவலை சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.