மதுரையில் நடந்த சர்பிளஸ் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நேற்று 20 நிமிடங்களில் முடிந்தது. இளங்கோ மாநகராட்சி பள்ளியில், மாவட்டத்திற்குள்ளான அரசு பள்ளிகளில் கூடுதல் மற்றும் காலிப்பணியிடங்களில் கணிதம் ஆசிரியர்களுக்கான பணிநிரவல் நடந்தது. மொத்தம் 27 இடங்கள் காண்பிக்கப்பட்டன. 20 நிமிடங்களில் 19 பேர் இடங்களை தேர்வு செய்தனர்.
அனைவருக்கும் அருகில் உள்ள பள்ளிகளிலேயே இடம் கிடைத்தது. இதற்கான உத்தரவுகளை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வழங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் ரேணுகா, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் அதிராமசுப்பு உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.