மருத்துவப் படிப்புக்கு இடம் தேர்வு செய்த, 69 பேர், சேர்க்கை கடிதம் பெறாமல் புறக்கணித்து உள்ளனர். தமிழகத்தில், மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வில், 2,939 பேர், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களை தேர்வு செய்தனர். ஆனால், பழைய மாணவர் சேர்க்கை விவகாரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்ததால், உடனடியாக சேர்க்கை கடிதம் தரப்படவில்லை.
சிக்கல் தீர்ந்தபின் சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது; கல்லுாரியில் சேர நேற்று கடைசி நாள். எம்.பி.பி.எஸ்., படிப்பில், அரசு கல்லுாரிகளில், 12 பேர்; சுயநிதி கல்லுாரிகளில், 46 பேர்; அரசு கல்லுாரிகளில், பி.டி.எஸ்., படிப்பில், 11 பேர் என, 69 பேர், இடம் தேர்வு செய்தும், சேர்க்கை கடிதம் பெறவில்லை.
மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் உஷா சதாசிவம் கூறுகையில், காலக்கெடு, நேற்றுடன் முடிந்தது. இடம் தேர்வு செய்த, 69 பேர் சேர்க்கை கடிதம் பெறவில்லை; இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். 69 இடங்களும் காலியாக அறிவிக்கப்பட்டு, அடுத்த கலந்தாய்வில் நிரப்பப்படும், என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.