Pages

Wednesday, May 20, 2015

பீகாரில் 40 ஆயிரம் போலி ஆசிரியர்கள்; விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

பீகாரில் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் 3 லட்சம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் அவர்களின் பட்டப்படிப்பு குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.


இதையடுத்து 40 ஆயிரம் பேர் போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், சி.பி.ஐ. விசாரணை கோரியும் சமூக ஆர்வலர் ரஞ்சித் பண்டிட், பாட்னா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்நாதர். இந்த வழக்குநீதிபதி நரசிம்மரெட்டி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் மாநிலம் முழுவதும் உள்ள 4 லட்சத்து 30 ஆயிரதம் அரசு ஆசிரியர்களின் 
கல்விதகுதி,சான்றிதழ்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி 1மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டார். கல்வித்துறை முதன்மை செயலர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.