Pages

Thursday, April 30, 2015

மத்திய அரசு சான்றிதழ் வழங்கும் விழா

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நாடு நிலை பள்ளி மாணவர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் 8ம் வகுப்பு மாணவர் ர.நவீன்குமார் வரவேற்புரை வழங்கினார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் விழாவிற்கு தலைமை தங்கினார்.
மாநில அளவில் தேசிய ஆற்றல் துறை சார்பாக "தேசிய எரிசக்தி சேமிப்பு விழிப்புணர்வு" என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் கலந்து கொண்டோருக்கான சான்றிதழ்களை பெற்றோர்கள் சார்பாக  தொட்டிய நாயக்கர் சமுதாய தலைவர் முருகன் வழங்கினார். இப்போட்டிகளில்  8ம் வகுப்பு மாணவி சொர்ணம்பிகா  முதல் பரிசையும் ,அதே வகுப்பை சார்ந்த பவனா  இரண்டாம் பரிசையும்,7ம் வகுப்பு மாணவி தனம் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

                                                          மாநில அளவில் மத்திய நீர்வாரியம் சார்பாக நடைபெற்ற "நீரை   சேமிப்போம்   வரும்காலம் காப்போம்" என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் கலந்துகொண்டோருக்கான சான்றிதழ்களை பெற்றோர் சார்பாக சித்ரா வழங்கி பள்ளியை பற்றி பேசினார்.இப்போட்டிகளில் 8ம் வகுப்பு மாணவி மங்கையர்க்கரசி முதல் பரிசையும் ,7ம் வகுப்பு மாணவி தனம் இரண்டாம் பரிசையும்,8ம் வகுப்பு மாணவி பூஜா மூன்றாம் பரிசையும்,மொத்தத்தில் போட்டியில்  கலந்துகொண்ட மாணவியர் அனைவருக்கும் சுமார் 80 மாணவ,மாணவியர்க்கு மத்திய அரசின் பங்கேற்பு சான்றிதள்கள் வழங்கப்பட்டது. விழாவில் மாணவ,மாணவியர்க்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியை முத்துலெட்சுமி செய்திருந்தார்.விழாவின் நிறைவாக 8ம் வகுப்பு மாணவி கிருஷ்ணவேணி  நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.