Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, March 29, 2015

    ஆந்திராவில் அரசு சொகுசு பஸ்களில் வைபை வசதி: ஏப்ரல் 1–ந்தேதி முதல் அமல்

    ஆந்திராவில் அரசு சொகுசு பஸ்களில் வைபை வசதி: ஏப்ரல் 1–ந்தேதி முதல் அமல் ஆந்திராவில் வெண்ணிலா, கருடா, கருடா பிளஸ் என்ற பெயரில் அரசு சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் வருகிற ஏப்ரல் 1–ந்தேதி முதல் இண்டர்நெட் வைபை வசதி செய்யப்பட உள்ளது.

    நீண்ட தூரம் பயணிக்கும் மக்களின் வசதிக்காக வைபை வசதி செய்யப்படுவதாக ஆந்திர அரசு போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறினார்கள்.
    முதல் கட்டமாக விஜயவாடாவில் இருந்து ஐதராபாத், விசாகப்பட்டினம், திருப்பதி, பெங்களூர், செல்லும் பஸ்களில் வைபை வசதி செய்யப்படுகிறது. பின்னர் விசாகப்பட்டினத்தில் இருந்து கிருஷ்ணா, குண்டூர், திருப்பதி செல்லும் பஸ்களில் விரிவுபடுத்தப்படும்.
    இதனை பயன்படுத்தும் பயணிகளுக்கு முதல் ஒரு மணி நேரம் இலவசமாக இந்த சேவை கிடைக்கும் அதன் பின் ரூ.16 கட்டணம் செலுத்தி தனது பயணம் முடிவுயும்வரை வசதியை பெறலாம்.
    இதன் மூலம் பயணிகள் தெலுங்கு உள்பட பல்வேறு படங்களை தங்களது லேப்–டாப், செல்போனில் பார்க்கலாம். 50 படங்கள் மற்றும் 400–க்கும் அதிகமான வீடியோ பாடல்கள் பார்க்கும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
    இதன் மூலம் சொகுசு பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.

    No comments: