Pages

Wednesday, February 11, 2015

சமூகநலத்துறை இயக்குனரை கண்டித்து சத்துணவு ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

சமூகநலத்துறை இயக்குனரை கண்டித்து சத்துணவு ஊழியர் சங்கத்தினர் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள 42 ஆயிரம் மையங்களில் 1.10 லட்சம் ஊழியர்கள் சத்துணவு துறையில் பணிபுரிகின்றனர். தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அமைப்பாளர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளது.
கிராமப்புறங்களில் ஒரே அமைப்பாளர்கள் இரண்டு முதல் மூன்று மையங்களை கவனித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டில் மட்டும் இரண்டு முறை காலவரையற்ற உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் இதுவரை அவர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை. இந்நிலையில், சத்துணவு துறையில் பணியாற்றும் ஊழியர்களின் உரிமைக்காக போராடும் தொழிற்சங்க நிர்வாகி ஒருவர் மீது சமூகநலத்துறை இயக்குனர் சஸ்பென்ட் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள் இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.