மதுரையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உத்தரவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது: மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலாண்டை விட அரையாண்டு தேர்வில் மாணவர் தேர்ச்சி விகிதம், மதிப்பெண் அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள் கற்பித்தல் பணியும் குறிப்பிடும் வகையில் இருந்தது. இச்சூழலில் தேர்ச்சியை மேலும் அதிகரிக்க பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு காலை, மாலை என இரு முறை சிறப்பு வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதில் மாணவர்களுக்கு தேவையான திட்டம் தயாரிக்க ஆசிரியர்கள் முன்வரவேண்டும். மாணவர்களின் கற்கும் திறனுக்கு ஏற்ப குழுக்களாக பிரித்து கற்பிக்கப்படும்.
எளிய வழிமுறைகள் தேர்ச்சி பெறும் ஆலோசனைகளும் அவர்களுக்கு வழங்கப்படும். உதவிபெறும் பள்ளிகளில் தேர்ச்சியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.