Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, January 20, 2015

    மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவு

    மதுரையில் அனைத்து அரசு பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு காலை, மாலையில் சிறப்பு வகுப்பு நடத்த முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி உத்தரவிட்டுள்ளார்.


    அவர் கூறியதாவது: மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் காலாண்டை விட அரையாண்டு தேர்வில் மாணவர் தேர்ச்சி விகிதம், மதிப்பெண் அதிகரித்துள்ளது. ஆசிரியர்கள் கற்பித்தல் பணியும் குறிப்பிடும் வகையில் இருந்தது. இச்சூழலில் தேர்ச்சியை மேலும் அதிகரிக்க பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு காலை, மாலை என இரு முறை சிறப்பு வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதில் மாணவர்களுக்கு தேவையான திட்டம் தயாரிக்க ஆசிரியர்கள் முன்வரவேண்டும். மாணவர்களின் கற்கும் திறனுக்கு ஏற்ப குழுக்களாக பிரித்து கற்பிக்கப்படும்.

    எளிய வழிமுறைகள் தேர்ச்சி பெறும் ஆலோசனைகளும் அவர்களுக்கு வழங்கப்படும். உதவிபெறும் பள்ளிகளில் தேர்ச்சியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

    No comments: