Pages

Saturday, January 31, 2015

'பயோமெட்ரிக் அட்டன்டன்ஸ்':மத்திய அரசு உத்தரவு

'மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும், 'பயோமெட்ரிக் அட்டன்டன்ஸ்' முறையில் வருகைப் பதிவை பராமரிக்க வேண்டும்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பணிக்கு வந்த ஊழியர்கள் எண்ணிக்கையும், அரசு பதிவேடுகளில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையும், அதிக அளவில் மாறுபடுவதால், சந்தேகம் அடைந்துள்ள மத்திய அரசு, மின்னணு முறையில், ஊழியர்களின் வருகையை பதிவு செய்யும் முறையை, பயன்படுத்த உத்தரவிட்டு உள்ளது.பணிக்கு வரும் போதும், பணி முடிந்து வெளியேறும் போதும், பயோமெட்ரிக் வருகைப் பதிவு இயந்திரத்தில், ஊழியர்கள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.ஊழியர்களின் வருகைப் பதிவை கண்காணிக்குமாறு, அனைத்து துறை செயலர்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.