தலைமைச் செயலக, தமிழ் வளர்ச்சி துறையின் மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு, வரும் 28ம் தேதி நேர்காணல் நடக்கிறது என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பு
தலைமைச் செயலக பணியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறையில், உதவிப் பிரிவு அலுவலர் நிலையில், மொழிபெயர்ப்பாளர் பதவிக்கான 16 காலி பணியிடங்களுக்கு, 2012 டிச.,6ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டது.
எழுத்து தேர்வு, 2013, பிப்., 3ம் தேதி நடந்தது. இந்தப் பதவிக்காக அனுமதிக்கப்பட்ட 46 விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல், வரும் 28ம் தேதி, தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது.
நேர்காணல் அழைப்புக் கடிதம், விரைவு அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் எஸ்.எம்.எஸ்., மற்றும் இ-மெயில் வழியாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.