3 மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடிக்குமாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு இயக்குநர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி யுள்ள உத்தரவில் கூறியிருப் பதாவது: மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் 3 மாதங்களுக்கு மேல் நிலுவையில் உள்ள கோப்பு களை பிரிவு வாரியாக பட்டிய லிட்டு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். இதேபோல், உதவி தொடக்கக்கல்வி அலுவலகங் களிலும் 3 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள கோப்பு களை பிரிவு வாரியாக பட்டிய லிட்டு உடனடியாக முடிக்கு மாறு அனைத்து உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகளும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உதவி தொடக்கக்கல்வி அலுவ லகங்களில் நிலுவையில் உள்ள கோப்புகளை முடித்த விவரங் களை டிசம்பர் 26-ம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலம் இயக்குநருக்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.