Pages

Wednesday, October 15, 2014

உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் 29ல் ஆர்ப்பாட்டம்

மதுரையில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி கூறியதாவது: தரம் உயர்த்தப்பட்ட 50 உயர்நிலை பள்ளிகளின் பெயர் பட்டியல் வெளியிட வேண்டும். தரம் உயர்த்தப்பட்ட 100 மேல்நிலை பள்ளிகளில் பணி புரியும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேர்மையான முறையில் பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும்.

'நிர்வாக காரணம்' எனக் கூறி மாற்றப்பட்ட எஸ்.எஸ்.ஏ., திட்ட வட்டார வளமைய மேற்பார்வையாளர்களை மீண்டும் சொந்த மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் போன்ற 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.