பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், என, திருவண்ணாமலையில் நடந்த தமிழக தமிழாசிரியர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து தமிழாசிரியர்களும், தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த சிறந்த முறையில், மாணவர்களை உருவாக்க பாடுபட வேண்டும். பணி நிரவல் என்ற பெயரில், ஆசிரியர் பணியிடங்களை குறைப்பதை தடுக்க, தமிழக அரசு பணி நிரவலை கைவிட வேண்டும்.
மாணவர் மன்ற தேர்வினை திருப்புதல் தேர்வுக்கும், இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்த வேண்டும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், தமிழில், 100க்கு 100 மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், தமிழ் ஆசிரியர்களுக்கு ஒரு கிராம் தருவதாக, மாநில தலைவர் அறிவித்துள்ளதை வரவேற்கிறது. பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், எனப்பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.