இந்தியாவில் பதவியேற்ற நரேந்திர மோடி அரசில், மத்திய மனிதவளத் துறையின் கேபினட் அமைச்சராக ஸ்மிருதி சுபின் இரானி நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, மே 26ம் தேதி மாலை பதவியேற்றது. புதிய அமைச்சரவையில், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. மத்திய மனிதவளத் துறைக்கு புதிய அமைச்சராக, 38 வயதே நிரம்பிய ஸ்மிருதி சுபின் இரானி என்ற பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகால மத்திய அரசில், அர்ஜுன் சிங், கபில் சிபல் மற்றும் பல்லம் ராஜு போன்ற ஆண்களே மனிதவளத்துறை கேபினட் அமைச்சர்களாக பதவி வகித்தனர். அவர்களெல்லாம் வயது முதிர்ந்தவர்கள். ஆனால், இப்போது, நாட்டின் மிக முக்கியமான துறைக்கு, 40 வயதைக்கூட தொடாத ஒரு பெண்மணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இளைஞரான அவர், பல சிறப்பான திட்டங்களை துடிப்புடன் மேற்கொண்டு, இந்திய கல்வித்துறையில் பல விரும்பத்தக்க சீர்திருத்தங்களை மேற்கொள்வார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!
மத்திய மனிதவளத் துறைக்கென்று இணையமைச்சர் யாரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.