Pages

Friday, May 30, 2014

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு ஜூன் 23-ந்தேதி தொடக்கம்

பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் மாதம் 23-ந்தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான

விண்ணப்ப படிவங்கள் விநியோகம் கடந்த 3-ந்தேதி தொடங்கியது. பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் 27-ம் தேதி வரை பெறப்பட்டன. இதையடுத்து ரேண்டம் எண் வரும் 11-ம் தேதி வெளியிடப்பட்டு, 16-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜூன் 13 முதல் 16-ந்தேதி வரை நடைபெறும்.


அதன்பின்னர் ஜூன் 23-ம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. ஜூன் 23 மற்றும் 24-ந்தேதி விளையாட்டு பிரிவினருக்கான கலந்தாய்வும், 25-ந்தேதி மாற்றுத்திறனாளி பிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறும். ஜூன் 27-ந்தேதி முதல் ஜுலை 28-ந்தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. தொழிற்பிரிவிற்கு ஜூலை 9 முதல் 20-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.