Pages

Tuesday, April 22, 2014

கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிப்போருக்கே வாக்களிப்போம் ஆசிரியர் கூட்டணி அறிவிப்பு

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் வேட்பாளருக்கே வாக்களிப்போம் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாலர் செ.முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 1988- முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை ஆசிரியர்கள் பெற்றுவந்தோம். ஆனால் கடந்த ஆட்சியில் தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியம் மட்டும் குறைக்கப்பட்டது. அதுமுதல் இதுவரையில் (தற்போதைய ஆட்சியிலும் ) மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்கள் பெறமுடியவில்லை.
இந்நிலையில் 16-வது மக்களவைத் தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தலில் ஆளுங்கட்சியோ அல்லது எந்த கட்சியானாலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை பெற்றுத்தருவதாகவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதாகவும் உறுதியளிக்கும் வேட்பாளருக்கே வாக்களிப்பதாக ஆசிரியர் கூட்டணி முடிவெடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. The above news is lot of confusion,
    we don't know who was type this news.
    kindly request you to please give the correct message.

    Are you aware of 9th march 2014 supreme court has given the judgement for fill the 652 posts through employment seniority.

    ReplyDelete
  2. sorry the above message is wrong
    this comment should be for computer teacher appointment for next message.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.