ஆசிரியர் தேர்வுவாரியத் தேர்வில், தேர்ச்சி பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசி ரியர்களுக்கு உடனே பணி ஆணை வழங்க வேண்டும் என்று அந்தத் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிக ளில் காலியாக உள்ள 2800 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான, டி.ஆர்.பி. தேர்வு கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர் வில், தமிழ் பாடத்தில் தேர் ச்சி பெற்றவர்களுக்கு மட் டும் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பணி ஆணை வழங்கப்பட்டது.இந்நிலையில், மற்ற பா டத்தில் தேர்ச்சி பெற்றவர்க ளுக்கு பணி ஆணை வழங் கப்படவில்லை என தர்ம புரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்க ளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட தேர்வர்கள் ஞா யிறன்று டி.ஆர்.பி. அலுவல கத்திற்கு வந்திருந்தனர்.
இதுகுறித்து, தரும புரியைச் சேர்ந்த முது நிலைப் பட்டதாரி ஆசிரி யர் பாபு கூறுகையில், முது நிலைப்பட்டதாரிகளுக் கான தேர்வில், தேர்ச்சி பெற்ற தமிழ் பாடத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் கடந்த மூன்று மாதங்களு க்கு முன்பாக பணி ஆணை வழங்கப்பட்டு, பணிபுரிந்து வருகின்றனர். நாங்கள் தேர்ச்சி பெற் றும் இதுவரை, இயற்பியல், வேதியியல், கணிதம், வரலாறு உள்ளிட்ட பாடத் தில் தேர்ச்சி பெற்றவர்களு க்கு பணி ஆணைஇதுவரை யில் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து டி.ஆர்.பியி டம் கேட்டதற்கு, 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் உள்ளது. அதன் தீர்வு வந்தபிறகுதான், அதாவது, ஜூன் அல்லது ஜூலை மாதங்களில்தான் பணி ஆணைவழங்கப்படும் என்று தெரிவித்துவிட்ட னர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.