Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 3, 2014

    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்

    3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது. 2004க்குப் பிறகு பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்-அரசு அலுவலர்களுக்கு செயல்படுத்தப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும். 2004 முதல் 2006 ஆம் ஆண்டு வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன நாள் முதல் பணிவரன் முறை செய்ய வேண்டும்.

    ஆசிரியர்களுக்கு பணிச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை அரண்மனைவாசல் அருகே கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடைபெற்றது.

    உண்ணாவிரதத்துக்கு ஆசிரியர் உரிமை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நீ.இளங்கோ தலைமை வகித்தார். தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் மாரிராஜன், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக பொருளாளர் இரா.இளங்கோவன், உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் சேதுச்செல்வம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் முத்துப்பாண்டி, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் தியாகராஜன், தொழில் கல்வி ஆசிரியர் சங்க மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், தமிழக தமிழாசிரியர் கழக மாவட்டத் தலைவர் மீனாட்சி சுந்தரம், ஆங்கில மொழி ஆசிரியர் கழக நிறுவனர் சேவியர் ஆரோக்கியதாஸ், இடைநிலை ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் அ.சங்கர், தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் அலெக்ஸாண்டர், வரலாற்று ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் பழனியப்பன், ஓவிய ஆசிரியர் கழக மாவட்டப் பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு உறுப்பினர் பி.பிரெடரிக் எங்கல்ஸ், tnkalviடி.சதீஸ் ஆகியோர் கோரிக்கை விளக்க உரை ஆற்றினர். முத்துச்சாமி நன்றி கூறினார்.

    No comments: