சி.பி.எஸ்.இ., சமீபத்தில் நடத்திய மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின்(CTET) முடிவுகள் வரும் 21ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 16ம் தேதி நடைபெற்ற இத்தேர்வை மொத்தம் 8.26 லட்சம் பேர் எழுதினர்.
தேர்வெழுதியவர்களின் OMR sheet -களின் இமேஜ்கள், மொழிகள் மற்றும் பாடங்கள் குறித்த தகவல்களுடன் வாரியத்தால் பதிவேற்றம்(upload) செய்யப்பட்டுள்ளன. CBSE/CTET வலைதளத்தில், வாரியத்தால், Answer key பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கென்று, தேசிய மற்றும் மாநில அளவிலான தகுதித்தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. முந்தைய தேர்வுகளின் முடிவுகள்படி பார்த்தால், தேர்வெழுதியோரில் சுமார் 10% அளவிற்கும் குறைவானவர்களே தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இது பல்வேறான விமர்சனங்களை கிளப்பி விட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.