மத்தியப் பிரதேச மாநிலத்தின் கட்டட மற்றும் இதர கட்டுமான பணியாளர்களின் நல வாரியம், கல்வி உதவித் திட்டத்திற்காக, மேற்கூறிய பணியாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் அந்தப் பணியாளர்களின் பிள்ளைகளுக்கு இந்த சலுகைப் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த சலுகைத் திட்டத்தில் சேர, சம்பந்தபட்டவர்கள், வாரியத்தின் செயலருக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
இல்லையெனில், படிக்கும் கல்வி நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட டீன்கள், முதல்வர்கள் ஆகியோர் மூலமாக, அந்தந்த மாவட்டத்தின் பணியாளர் அலுவலகத்திற்கு விண்ணப்பத்தை அனுப்பலாம். உதவித்தொகை ரூ.7,000 முதல் ரூ.10,000 வரை இருக்கும்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.