ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யவேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கவேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று திருச்சியில் ஊர்வலம் நடைபெற்றது.
திருச்சி வெஸ்ட்ரி பள்ளி அருகில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலத்திற்கு கூட்டு நடவடிக்கை குழுவின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். ஊர்வலம் கலெக்டர் அலுவலகம் சென்றடைந்ததும் அங்கு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.