தமிழகத்தில் நடந்த ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில் பல்வேறு காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டதால் விரக்தியுற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள், கோர்ட்டில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் 115 ஆசிரியர் பயிற்றுனர்களை, பட்டதாரி ஆசிரியர்களாக மாற்றி, அரசு உத்தரவிட்டது.
இவர்களுக்கு, டிச.,31ல், மாநிலம் முழுவதும் மாறுதல் கலந்தாய்வு நடந்தது. இதில் பல இடங்கள் மறைக்கப்பட்டதால், சொந்த மாவட்டங்களில் 90 சதவிகிதம் வரையான காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனால், பலர் தொலைதூர மாவட்டங்களில் பணியேற்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். ஆசிரியர் பயிற்றுனர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: எந்த முன்னறிவிப்பும் இன்றி மேற்பார்வையாளர், ஆசிரியர்பயிற்றுனர்களை அரசு பள்ளிகளுக்கு மாற்றியதால் மன உளைச்சலில் உள்ளோம். இதற்கிடையில் பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கான நடந்த கவுன்சிலிங்கில் மேலிட உத்தரவுப்படி காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளது.
டிச., 28ல், 961 பட்டதாரி ஆசிரியர்கள், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றனர். ஆனால், டிச.,31ல் நடந்த கவுன்சிலிங்கில் அந்த பணியிடங்கள் காண்பிக்கப்படவில்லை. மறைக்கப்பட்ட பணியிடங்களுக்கு தற்போது பேரம் நடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து நியாயம் கேட்டு கோர்ட்டில் வழக்குத் தொடர உள்ளோம், என்றனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.