Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, January 1, 2014

    போலி சான்றிதழ் மூலம் பணி: பல்கலைக்கழக தனி அலுவலர் நீக்கம்

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், போலி சான்றிதழ் கொடுத்து, தொலைதூரக் கல்வி படிப்பு மையத்தில் தனி அலுவலராக பணிபுரிந்தவர், பணிநீக்கம் செய்யப்பட்டார்.


    கடலூர் மாவட்டம் சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக கடந்த ஏப்ரல் 4ம் தேதி, நிர்வாக சிறப்பு அதிகாரியாக முதன்மைச்  செயலர் ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டு பல்கலைக்கழகம், அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அதை தொடர்ந்து, குறிப்பிட்ட காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், ஊழியர்களின் கல்விச் சான்றிதழ்கள், ஆய்வுக்கு அனுப்பி சரிபார்க்கப்பட்டது.

    அதில், திருவண்ணாமலை தொலைதூரக் கல்வி படிப்பு மைய தனி அலுவலராக பணிபுரிந்து வந்த கடலூர் மாவட்டம், திட்டக்குடியைச் சேர்ந்த சரவணன் மகன் செந்தில்குமார் 26, என்பவர், போலி சான்றிதழ் கொடுத்து 2011, ஜூலை 14ம் தேதி பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், 2004-08ம் கல்வி ஆண்டில், "எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ் இன்ஜினியரிங்" படித்ததாக, சான்றிதழ் கொடுத்துள்ளார்.

    அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சான்றிதழை அனுப்பி சரிபார்த்ததில், அவர் கொடுத்த சான்றிதழ் போலி என தெரியவந்தது. இதையடுத்து, செந்தில்குமாரின் பணி நியமன உத்தரவை ரத்து செய்யும்படி நிர்வாக சிறப்பு அதிகாரி, ஷிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார். பல்கலைக்கழகத்தில், 1,700க்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ் மூலம் பணி நியமனம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

    முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட நபர் முதன் முதலாக பணிநீக்கம் செய்யப்பட்டது, ஊழியர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    No comments: