Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, January 28, 2014

    100 சதவீத தேர்ச்சி காட்டிய 51 பள்ளிகளுக்கு கேடயம்: கல்வித்துறை வழங்கியது

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 100 சதவீத தேர்ச்சியை காட்டிய 51 பள்ளிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.10, பிளஸ் 2 தேர்வுகளில் 70 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி வீதம் பெற்ற பள்ளிகளுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை சாந்தோமில் நேற்று நடந்தது.
    இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். 

    பள்ளிக்கல்வி முதன்மைச் செயலர் சபிதா, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன், பள்ளிக்கல்வி துணை செயலர் பழனிச்சாமி, பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் பிச்சை மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வீரமணி தலைமை தாங்கினார்.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்  2012-2013ம் கல்வி ஆண்டு நடந்த பொதுத் தேர்வில்  201 பள்ளிகள் 70 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி வீதம் பெற்றுள்ளன. அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க ஆலோசனை கூறப்பட்டது. சென்னை மாவட்டத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் 100 சதவிகித தேர்ச்சி பெற்ற 51 பள்ளிகளுக்கு கேடயங்கள்¢ வழங்கப்பட்டன.அ

    No comments: