Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, January 18, 2014

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததால் 2,500 ஒப்பந்த ஆசிரியர்களை நீக்க முடிவு

    பீகாரில், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட, 2,500 ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததால், அவர்களை நீக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

    தகுதித் தேர்வு:

    பீகாரில், ஆரம்ப பள்ளிக்கூடங்களில், ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த, ஒப்பந்த அடிப்படையில், ஆயிரக்கணக்கில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி அடைந்தவர்களை மட்டும் நிரந்தரமாக்க, முடிவு செய்யப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட, ஆசிரியர்களின் பாடம் நடத்தும் தரம், குறைவாக இருப்பதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, ஆசிரியர்களின் தரத்தை நிர்ணயிப்பதற்காக, தகுதித் தேர்வு நடத்த, மாநில அரசு முடிவு செய்தது. இது, 2008ல் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, மற்றொரு வாய்ப்பும் வழங்கப்பட்டது. அதிலும் தேர்ச்சி பெறாதவர்கள், பணியில் இருந்து நீக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டது.

    2 முறையும் தோல்வி:

    அந்த வகையில், 2012ல் இரண்டு முறை தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், தேர்ச்சி அடையாத, 151 ஆசிரியர்கள் நீக்கப்பட்டனர்; கடந்தாண்டு, 10 ஆயிரம் ஆசிரியர்கள் நீக்கப்பட்டனர். அந்த வகையில், இந்தாண்டு, இரண்டு முறை தொடர்ந்து நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் தேர்ச்சி அடையாத, 2,733 ஆசிரியர்கள், விரைவில் பணியிலிருந்து நீக்கப்பட உள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை, மாநில கல்வித் துறை துவக்கிவிட்டதாக, மாநில கல்வி அமைச்சர், பி.கே.சகாய் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், ''அரசுக்கு மாற்று வழி தெரியவில்லை; விதிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது,'' என்றார்.

    No comments: