மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை லிமிடெட் துறையில் சேர்வதற்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, நேர்முகத் தேர்வு விபரத்தை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.
மொத்தம் 58 நபர்களுக்கான இந்த நேர்முகத் தேர்வு(personality test), டிசம்பர் 16ம் தேதி தொடங்கி, 20ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த நேர்முகத் தேர்வுக்கு வருபவர்கள், சம்பந்தப்பட்ட சீருடையில் வருவதோடு, அடையாள அட்டை மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு போட்டோக்களையும்(சமீபத்தில் எடுத்தது) எடுத்துவர வேண்டும்.
நேர்முகத் தேர்வு, காலை மற்றும் மதியம் என்று இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும். இந்த நேர்முகத் தேர்வுக்கு மொத்தம் 200 மதிப்பெண்கள்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.