ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த அபராதம் குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் தெரிவித்த கருத்து வருமாறு:
கேள்வி: ஆசிரியர் தகுதித் தேர்வில் குளறுபடி நடைபெற்றதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவருக்கு சென்னை உயர்நீதிமன்ற (மதுரைக் கிளை) நீதிபதி நாகமுத்து அவர்கள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறாரே?
கலைஞர்: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலை வராக ஒரு மூத்த அய்.ஏ.எஸ். அதிகாரிதான் பணியில் இருந்து வருகிறார். அவருக்கு உயர்நீதிமன்றம் அப ராதம் விதித்திருப்பது என்பது அரசுக்கே அவ மானத்தைத் தரக்கூடிய ஒரு தீர்ப்பாகும்.
நீதியரசர் தனது தீர்ப்பில், இந்த வழக்கு ஓராண் டாக நிலுவையில் உள்ளது. பலமுறை விசார ணைக்கு வந்தும், தேர்வு வாரியத்தின் தலைவர் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. அரசுத் தரப்பிற்கு கால அவகாசம் அளித்தும், நடவடிக்கை இல்லை. இத னால் மனுதாரர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளார்.
தேர்வு வாரியத் தலைவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். அவர் தொகையை மனுதாரருக்கு வழங்கவேண்டும் என்றெல்லாம் சொல்லியிருப்பது, தனிப்பட்ட ஒரு அதிகாரிக்குக் கண்டனம் அல்ல, அ.தி.மு.க. அரசுக்கே விதிக்கப் பட்ட தண்டனையாகத்தான் கருத வேண்டும்.
இந்த வழக்கிலே மாத்திரமல்ல; இரண்டு நாட் களுக்கு முன்பு உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஜெயச்சந் திரன், நாகமுத்து ஆகியோர், கொலை வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பிலேகூட தங்கள் வேதனை யைத் தெரிவித்திருக்கிறார்கள். அந்தத் தீர்ப்பில், குற்றவாளிகளின் வாக்குமூலத்தின் அடிப்படையில் கீழ் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கொலைக்குப் பயன்படுத்திய அரிவாளை காவல்துறையினர் பறி முதல் செய்துள்ளனர்.
அதை நீதிமன்றத்தில் ஒப்ப டைக்கவில்லை. அதில் படிந்திருந்த ரத்தக்கறையை டி.என்.ஏ. சோதனைக்கு அனுப்பி, அந்த அரி வாளைத்தான் கொலையாளிகள் பயன்படுத்தினர் என்பதை நிரூபிக்கவில்லை. விசாரணையில் பல் வேறு குறைபாடுகள் இருந்தன. அந்தக் குறை பாடுகளைக் களைய காவல்துறையினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதைக் காவல்துறையினர் சரி யாகப் பயன்படுத்தவில்லை.
இந்த வழக்கில் காவல்துறையினரின் பல்வேறு குறைபாடுகள், தவறுகள், திறமையின்மை வெளிப் பட்டுள்ளது. இதற்குமேல் விசாரணை அமைப்பை எப்படி விமர்சனம் செய்யவேண்டும் எனத் தெரிய வில்லை. கல்நெஞ்சம் படைத்த கொலையாளிகள் நான்கு பேரைக் கொடூரமாகக் கொலை செய் துள்ளனர். காவல்துறையினரின் விசாரணை முழு வதும் வீணாகி விட்டது. உயர்நீதிமன்றம் வைத் திருந்த நம்பிக்கையை காவல்துறையினர் தகர்த்து விட்டனர்.
தகுந்த ஆதாரங்கள் சாட்சியங்களின் அடிப்படையில் நிரூபிக்க காவல்துறையினர் தவறிவிட்டனர். காவல்துறையினர் பொறுப்பு, கடமைகளில் தவறியதை உணரவேண்டும். விசாரணையில் காவல்துறையினர் அலட்சியம் காட்டுவது, நீதி, நியாயம் தோற்கக் காரணமாக அமைகிறது.
இந்த வழக்கில் நீதி தோற்றதை கனத்த இதயத்துடன் சொல்கிறோம் என்று காவல்துறைபற்றி நீதிபதிகள் விமர்சித்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இப்படியொரு தீர்ப்பு வந்திருந்தால் உடனே காவல்துறைக்குப் பொறுப் பேற்றுள்ள மைனாரிட்டி ஆட்சியின் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்று அறிக்கை கொடுத் திருப்பார்கள். ஆனால் இப்போது?
- இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.