Pages

Tuesday, September 24, 2013

தொழிற்­ப­யிற்சி பள்­ளி­களில் ஆசி­ரியர் பற்­றாக்­குறை: மாண­வர்கள் தவிப்பு

அரசு தொழிற்­ப­யிற்சி பள்­ளி­ களில், ஏரா­ள­மான ஆசி­ரியர் பணி­யி­டங்கள் காலி­யாக உள்­ளதால், மாண­வர்­களின் தொழிற்­ப­யிற்சி திறன் கேள்வி குறி­யாகி உள்­ளது.

தமி­ழ­கத்தில், 62 தொழிற்­பயிற்சி பள்­ளி­களை அரசு அமைத்­துள்­ளது. இவை, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்­சித்­துறை கட்­டுப்­பாட்டில், இயங்கி வரு­கின்­றன. இதில், பிட்டர், வெல்டர், பொருத்­துனர், மோட்டார் மெக்­கானிக், டெய்­லரிங் பயிற்சி, "ஏசி" மெக் கானிக் உள்­ளிட்ட தொழிற் பாடப் ­பி­ரி­வு­களில் பயிற்சி அளிக்­கப்­ப­டு­கி­றது.

காஞ்­சி­புரம் மாவட்­டத்தில், செங்­கல்­பட்டு பகு­தியில் அரசு தொழிற்­ப­யிற்சி பள்ளி செயல்­பட்டு வரு­கி­றது. இதில், ஆண்டு தோறும் வகுப்­பிற்கு, 50 மாண­வர்கள் என, மாணவர் சேர்க்கை நடை­பெ­று­கி­றது. தமி­ழகம் முழு­வதும், ஆண்­டு­தோறும் 31 ஆயிரம் பேர் தொழிற்­ப­யிற்சி பெறு­கின்­றனர்.

5 புதிய பள்­ளிகள் ஒவ்­வொரு பாடப்­பி­ரி­விற்கும், ஒரு ஆசி­ரியர் என, ஒவ்­வொரு மையத்­திலும், 10க்கும் மேற்­பட்ட, ஆசி­ரியர் பணி­யி­டங்கள் உள்­ளன. ஆனால், பெரும்­பா­லான பள்­ளி­களில் 4 பணி­யிடங்­களில் மட்­டுமே, ஆசி­ரியர்கள் உள்­ளனர். தமி­ழகம் முழு­வதும், அரசு தொழிற்­ப­யிற்சி பள்­ளி­களில், 469 ஆசி­ரியர் பணி­யி­டங்கள் காலி­யாக உள்­ளன.

இந்த நிலையில், தமி­ழ­கத்தில் புதி­தாக 5 தொழிற்­ப­யிற்சி பள்­ளிகள் தொடங்க, நிதி ஒதுக்கி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்­சி ­து­றைக்கு, முதல்வர் ஆணை பிறப்­பித்­துள்ளார்.

புதிய தொழிற்­ப­யிற்சி பள்­ளி­களில் உரு­வாகும் பணி­யி­டங்­ களையும் சேர்த்தால், தமி­ழ­கத்தில் மொத்தம் 569 தொழிற்­ப­யிற்சி ஆசி­ரியர் பணி­யி­டங்கள் காலி­யாக இருக்கும். வகுப்பு நடத்த ஆசி­ரி­யர்கள் பற்­றாக்­குறை உள்­ளதால், மாண­வர்­களின் கல்வி திறன் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து, அரசு தொழிற் பயிற்சி பள்ளி முதல்வர் ஒருவர் கூறு­கையில், "அரசு தொழிற்­பயிற்சி பள்­ளி­களில், காலி­யாக உள்ள இள­நிலை பயிற்சி அலுவலர் பணி­யி­டங்­க­ளுக்கு, கடந்த 2000ல், அரசு வேலை வாய்ப்­பகம் மூலம், ஆட்கள் நிய­மிக்­கப்­பட்­டனர். அதன்பின், கடந்த, 13 ஆண்­டு­க­ளாக ஆசிரியர் பணி­க­ளுக்கு ஆள்­தேர்வு நடை­பெ­றா­ததால், பற்­றாக்­குறை ஏற்­பட்டு, மாணவர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். காலி பணி­யி­டங்­களை நிரப்ப, தமி­ழக அரசு நடவ­டிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

காலிப் பணியிடங்கள்

இது­கு­றித்து, அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்­சித்­துறை அதி­கா­ரிகள் கூறுகையில் "அரசு தொழிற்­ப­யிற்சி பள்­ளி­களில் காலி­யாக உள்ள பணியிடங்க­ளுக்கு ஆசி­ரியர் தேர்வு செய்­வது குறித்து அர­சுதான் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்," என்­றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.