சிறப்பு ஆசிரியர் குறைதீர்க்கும் முகாம் திட்டத்தின்படி அனைத்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், முதன்மைக் கல்வி அலுவலகங்கள், தொடக்க, பள்ளிக் கல்வி இயக்ககங்களில் பதிவேடுகள் தயார் செய்து பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த பதிவேட்டில் ஆசிரியர், ஆசிரியரல்லாத பணியாளரது பெயர், பணிபுரியும் இடம், கோரிக்கை மனு வழங்கிய நாள், கோரிக்கை விவரம், தீர்வு செய்திருந்தால் அதன் விவரம் ஆகியவற்றை அட்டவணைப்படுத்தி பதிவு செய்ய வேண்டும். இந்த பதிவேடுகளை உயர் அலுவலர்களின் ஆய்வுக்குள்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.