தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தொடர் மறியல் போராட்டம் 25.09.2013 முதல் தலைநகரில் நடைபெற்று வருகிறது...முதல்நாள் 5000 பேர் கைது, 2ஆம் நாள் 2000மகளிர் உட்பட 5000பேர் கைது, 3ஆம் நாள் 5000பேர் கைது என மறியல் போர் தொடர்ந்து நடந்தாலும் ஆளும் அரசு அதைப்பற்றி கண்டுகொண்டதாகவே தெரியவில்லை..
"ஆசிரியரை மதிக்காத சமூகம் உருப்பட்டதில்லை" என்பதற்கேற்ப ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறந்தள்ளும் அரசுக்கு, காலம் தாழ்த்தத் தாழ்த்த அந்த காலமே தகுந்த பதில் சொல்லும்... //காலம் சொன்ன பதிலைக் கேட்கும் இடத்தில் காலம் தாழ்த்திய அரசுகள் இருந்ததில்லை //என்பதே இயக்க வரலாறு. பணிவது பயந்தல்ல...,பாய்வதற்கே என உணர்த்தும் நாள் தொலைவில் இல்லை... ஒன்றுபடுவோம், போராடுவோம், இறுதி வெற்றி நமதே..!
முகநூலிருந்து சரவணன் சரோ
முகநூலிருந்து சரவணன் சரோ
2 comments:
Vetri pera vaalthukal.
Ungal porattam vetri pera vendum
Post a Comment