Pages

Thursday, September 26, 2013

தமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி மேலாண்மை குறித்து பயிற்சி

தமிழகத்தில் 2,400-க்கும் அதிகமான பள்ளிகளில் நிதி மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.

பள்ளிக் கல்வி இயக்குநரகம் மற்றும் தேசிய பங்குச் சந்தை செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி 8,9,11,12 ஆம் வகுப்பு தமிழ், ஆங்கில வழி பயிலும் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதன் மூலம் மாணவர்கள் நிதி மேலாண்மை, சேமிப்பு, புத்திசாலித்தனமாகச் செலவு செய்தல் உள்ளிட்ட அத்தியாவசியமான விஷயங்களைக் கற்று வருகின்றனர்.

இந்தப் பயிற்சி மூலம் நடப்பாண்டில் (2013-14) 7 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் நிதி மேலாண்மை குறித்து அறிந்து வருவதாக தேசிய பங்குச் சந்தையின் முதன்மை வணிக வளர்ச்சி அதிகாரி ரவி வாரணாசி கூறினார்.

இந்த மாணவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் 25 வகுப்புகளோடு பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூடுதலாக 6 வகுப்புகள் நடைமுறைப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.