Pages

Thursday, July 4, 2013

10ம் வகுப்பு வரலாறு புத்தகத்தால் சர்ச்சை

மும்பையில் 10ம் வகுப்பு பாட புத்தகத்தில் தவறான பகுதிகளை நீக்கி விட்டு நடப்பு ஆண்டுக்கான பாட புத்தகத்தை கல்வித்துறை சமீபத்தில் வழங்கியது.
 
இருப்பினும் வரலாற்று பாட புத்தகத்தில் சூயஸ் கால்வாய் கழிவுநீர் நிறைந்த பகுதி எனவும், பர்மா பிரம்மதேசம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தவறுகள் நீக்கப்பட்ட பின்னரும் இத்தகைய வரிகள் இடம் பெற்றிருப்பதால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் இதனை கற்பிக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

மேலும் புத்தகத்தில் ஏராமான மொழி பிழைகளும், எழுத்து பிழைகளும் இருப்பதாகவும் ஆசிரியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். புகழ்பெற்ற தேசிய தலைவர்களின் பெயர்கள், இடங்களின் பெயர்களும் தவறுதலாகவே அச்சிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.